சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.009
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வண்டு ஆர் குழல் அரிவையொடு பண் - நட்டபாடை (திருவேணுபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=Ju46thqI25s Audio: https://sivaya.org/audio/1.009 Vandaar kuzhal.mp3 |
2.017
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நிலவும், புனலும், நிறை வாள் பண் - இந்தளம் (திருவேணுபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=0JLxxTgKXOw |
2.081
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்! ஓதத்தின் பண் - காந்தாரம் (திருவேணுபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=jIemSuLWelU |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.009  
வண்டு ஆர் குழல் அரிவையொடு
பண் - நட்டபாடை (திருத்தலம் திருவேணுபுரம் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம் பெண்தான் மிக ஆனான், பிறைச் சென்னிப் பெருமான், ஊர் தண் தாமரை மலராள் உறை தவள நெடுமாடம் விண் தாங்குவ போலும் மிகு வேணுபுரம் அதுவே. | [1] |
படைப்பு, நிலை, இறுதி, பயன், பருமையொடு, நேர்மை, கிடைப் பல்கணம் உடையான், கிறி பூதப்படையான், ஊர் புடைப் பாளையின் கமுகினொடு புன்னை மலர் நாற்றம் விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே. | [2] |
கடம் தாங்கிய கரியை அவள் வெருவ உரி போர்த்து, படம் தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழ ஊர் நடம் தாங்கிய நடையார், நல பவளத்துவர் வாய், மேல் விடம் தாங்கிய கண்ணார், பயில் வேணுபுரம் அதுவே. | [3] |
தக்கன்தன சிரம் ஒன்றினை அரிவித்து, அவன் தனக்கு மிக்க வரம் அருள் செய்த எம் விண்ணோர் பெருமான் ஊர் பக்கம் பலமயில் ஆடிட, மேகம் முழவு அதிர, மிக்க மது வண்டு ஆர் பொழில் வேணு புரம் அதுவே. | [4] |
நானாவித உருவான், நமை ஆள்வான், நணுகாதார் வான் ஆர் திரி புரம் மூன்று எரியுண்ணச் சிலை தொட்டான், தேன் ஆர்ந்து எழு கதலிக்கனி உண்பான் திகழ் மந்தி மேல் நோக்கி நின்று இரங்கும் பொழில் வேணுபுரம் அதுவே. | [5] |
மண்ணோர்களும் விண்ணோர்களும் வெருவி மிக அஞ்ச, கண் ஆர் சலம் மூடிக் கடல் ஓங்க, உயர்ந்தான் ஊர் தண் ஆர் நறுங்கமலம் மலர் சாய, இள வாளை விண் ஆர் குதிகொள்ளும் வியன் வேணுபுரம் அதுவே. | [6] |
மலையான் மகள் அஞ்ச, வரை எடுத்த வலி அரக்கன் தலை தோள் அவை நெரியச் சரண் உகிர் வைத்தவன் தன் ஊர் கலை ஆறொடு சுருதித் தொகை கற்றோர் மிகு கூட்டம் விலை ஆயின சொல்-தேர்தரு வேணுபுரம் அதுவே. | [7] |
வயம் உண்ட தவமாலும் அடி காணாது அலமாக்கும், பயன் ஆகிய பிரமன் படுதலை ஏந்திய பரன் ஊர் கயம் மேவிய சங்கம் தரு கழி விட்டு, உயர் செந்நெல் வியல் மேவி, வந்து உறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே. | [8] |
மாசு ஏறிய உடலார் அமண்குழுக்களொடு தேரர், தேசு ஏறிய பாதம் வணங்காமைத் தெரியான் ஊர் தூசு ஏறிய அல்குல் துடி இடையார், துணைமுலையார், வீசு ஏறிய புருவத்தவர், வேணுபுரம் அதுவே. | [9] |
வேதத்து ஒலியானும் மிகு வேணுபுரம் தன்னைப் பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன்தன பாடல், ஏதத்தினை இல்லா இவை பத்தும், இசை வல்லார் கேதத்தினை இல்லார், சிவகெதியைப் பெறுவாரே. | [10] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.017  
நிலவும், புனலும், நிறை வாள்
பண் - இந்தளம் (திருத்தலம் திருவேணுபுரம் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
நிலவும், புனலும், நிறை வாள் அரவும், இலகும் சடையார்க்கு இடம் ஆம் எழிலார் உலவும் வயலுக்கு ஒளி ஆர் முத்தம் விலகும் கடல் ஆர் வேணுபுரமே. | [1] |
அரவு ஆர் கரவன், அமை ஆர் திரள்தோள குரவு ஆர் குழலாள் ஒருகூறன், இடம் கரவாத கொடைக்கு அலந்தார் அவர்க்கு விரவு ஆக வல்லார் வேணுபுரமே. | [2] |
ஆகம் அழகு ஆயவள்தான் வெருவ, நாகம் உரி போர்த்தவன் நண்ணும் இடம் போகம் தரு சீர் வயல் சூழ் பொழிகள் மேகம் தவழும் வேணுபுரமே. | [3] |
காசு அக் கடலில் விடம் உண்ட கண்டத்து ஈசர்க்கு இடம் ஆவது இன்நறவ வாசக்கமலத்து அனம், வன் திரைகள் வீச, துயிலும் வேணுபுரமே. | [4] |
அரை ஆர் கலை சேர் அனமென்னடையை உரையா உகந்தான் உறையும் இடம் ஆம் நிரை ஆர் கமுகின் நிகழ் பாளை உடை விரை ஆர் பொழில் சூழ் வேணுபுரமே. | [5] |
ஒளிரும் பிறையும் உறு கூவிள இன் தளிரும் சடைமேல் உடையான் இடம் ஆம் நளிரும் புனலில் நல செங்கயல் கண் மிளிரும் வயல் சூழ் வேணுபுரமே. | [6] |
ஏவும் படை வேந்தன் இராவணனை, ஆ என்று அலற, அடர்த்தான் இடம் ஆம் தாவும் மறிமானொடு தண்மதியம் மேவும் பொழில் சூழ் வேணுபுரமே. | [8] |
கண்ணன், கடிமாமலரில் திகழும் அண்ணல், இருவர் அறியா இறை ஊர் வண்ணச் சுதை மாளிகைமேல் கொடிகள் விண்ணில் திகழும் வேணுபுரமே. | [9] |
போகம் அறியார், துவர் போர்த்து உழல்வார், ஆகம் அறியா அடியார் இறைஊர் மூகம் அறிவார், கலை முத்தமிழ் நூல் மீ கம் அறிவார், வேணுபுரமே. | [10] |
கலம் ஆர் கடல் போல் வளம் ஆர்தரு, நல் புலம் ஆர்தரு, வேணுபுரத்து இறையை, நலம் ஆர்தரு ஞானசம்பந்தன், சொன்ன குலம் ஆர் தமிழ் கூறுவர் கூர்மையரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.081  
பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்! ஓதத்தின்
பண் - காந்தாரம் (திருத்தலம் திருவேணுபுரம் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்! ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வானவர் புகுந்து வேதத்தின் இசை பாடி, விரைமலர்கள் சொரிந்து, ஏத்தும் பாதத்தீர்! வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே. | [1] |
சுடுகாடு மேவினீர்! துன்னம் பெய் கோவணம், தோல் உடை ஆடை அது, கொண்டீர்! உமையாளை ஒருபாகம் அடையாளம் அது கொண்டீர்! அம் கையினில் பரசு எனும் படை ஆள்வீர்! வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே. | [2] |
கங்கை சேர் சடைமுடியீர்! காலனை முன் செற்று உகந்தீர்! திங்களோடு இள அரவம் திகழ் சென்னி வைத்து உகந்தீர்! மங்கை ஓர்கூறு உடையீர்! மறையோர்கள் நிறைந்து ஏத்த, பங்கயன் சேர் வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே. | [3] |
நீர் கொண்ட சடைமுடிமேல் நீள் மதியம் பாம்பினொடும் ஏர் கொண்ட கொன்றையினொடு எழில் மத்தம் இலங்கவே, சீர் கொண்ட மாளிகைமேல் சேயிழையார் வாழ்த்து உரைப்ப, கார் கொண்ட வேணுபுரம் பதி ஆகக் கலந்தீரே. | [4] |
ஆலை சேர் தண்கழனி அழகு ஆக நறவு உண்டு சோலை சேர் வண்டு இனங்கள் இசை பாட, தூ மொழியார் காலையே புகுந்து இறைஞ்சிக் கைதொழ, மெய் மாதினொடும் பாலையாழ் வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே. | [5] |
மணி மல்கு மால்வரை மேல் மாதினொடு மகிழ்ந்து இருந்தீர்! துணி மல்கு கோவணத்தீர்! சுடுகாட்டில் ஆட்டு உகந்தீர்! பணி மல்கு மறையோர்கள் பரிந்து இறைஞ்ச, வேணுபுரத்து அணி மல்கு கோயிலே கோயில் ஆக அமர்ந்தீரே. | [6] |
நீலம் சேர் மிடற்றினீர்! நீண்ட செஞ்சடையினீர்! கோலம் சேர் விடையினீர்! கொடுங்காலன் தனைச் செற்றீர்! ஆலம் சேர் கழனி அழகு ஆர் வேணுபுரம் அமரும் கோலம் சேர் கோயிலே கோயில் ஆகக் கொண்டீரே. | [7] |
திரை மண்டிச் சங்கு ஏறும் கடல் சூழ் தென் இலங்கையர் கோன் விரை மண்டு முடி நெரிய விரல் வைத்தீர்! வரை தன்னின் கரை மண்டிப் பேர் ஓதம் கலந்து எற்றும் கடல் கவின் ஆர் விரை மண்டு வேணுபுரமே அமர்ந்து மிக்கீரே. | [8] |
தீ ஓம்பு மறைவாணர்க்கு ஆதி ஆம் திசை முகன், மால், போய் ஓங்கி இழிந்தாரும் போற்ற(அ)ரிய திருவடியீர்! பாய் ஓங்கு மரக் கலங்கள் படு திரையால் மொத்துண்டு, சேய் ஓங்கு வேணுபுரம் செழும் பதியாத் திகழ்ந்தீரே. | [9] |
நிலை ஆர்ந்த உண்டியினர் நெடுங் குண்டர், சாக்கியர்கள் புலை ஆனார் அற உரையைப் போற்றாது, உன் பொன் அடியே நிலை ஆகப் பேணி, நீ சரண்! என்றார் தமை, என்றும் விலை ஆக ஆட்கொண்டு, வேணுபுரம் விரும்பினையே. | [10] |